நாம் பரிட்சைக்கு படிக்கவில்லை என்று ஒரு குற்ற உணர்வில் / குழப்பத்தில் இருக்கும் போது நம் நண்பன் ‘நானும் பரிட்சைக்கு படிக்கல மச்சான்’ என்று சொன்னவுடன் அந்த குற்ற உணர்வு/குழப்பம் நீங்கிவிடும்.
அதேபோல் நாம் பரீட்சையில் ஃபெயில் ஆகி வருத்தத்தில் இருக்கும்போது நம் நண்பனும் ஃபெயில் ஆகிவிட்டான் என்று தெரிந்தால் வருத்தம் போய்விடும். பரிட்சைக்கு படிக்காமல் இருப்பதற்கோ, ஃபெயில் ஆவதற்கோ வருத்தப்படாமல் இருக்க பழகிவிடும் ..
ஒரு பெரிய அடி விழும்வரை.. அந்த Support ஒரு நாம் தனி ஆள் இல்லை என்ற துனிவை கொடுக்கிறது. நாம் உயர்ந்த சாதி என்றும், நாம் ஆளப்பிறந்தவர்கள் என்றும், மற்றவர்கள் நமக்கு கீழ் என்றும், நாம் கோபக்காரர்கள் என்றும், சாதி கவுரவம் தான் பெரிது சொல்லி வளர்த்திருப்பார்கள்.
இப்போது, சிவாஜி கமல் போன்ற பெரிய நடிகர்கள் படத்தில் ‘போற்றி பாடடி பெண்ணே தேவர் காலடி மண்ணே’ னு பாட்டு வருது.. உச்ச நட்சத்திரம் ரஜினிகாந்த் படத்தில் ‘எஜமான் காலடி மண்ணெடுத்து நெத்தியில பொட்டு வைப்போம்’ னு பாட்டு வருது.. கதாநாயகர்களே சாதி அடையாளம், சாதி பெயர்களைத்தாங்கி, தாங்கள் மற்றவர்களை விட மேலானவர்வர்கள்னு காட்டுராங்க..
அதுபோக அடிதடி வேற பன்றது.. மிகப்பெரிய விஷுவல் மீடியாவான இந்த படங்கள் மூலம் நாங்கள் தனியாள் இல்லை என்ற Support கிடைக்கிறது இந்த சாதி வெறியர்களுக்கு.. இப்போ இந்த படங்களால் மட்டுமே கலவரங்கள் நடக்கபோவதில்லை..
ஒருபுறம் சாதிகளை ஒழிக்க குறைந்தபட்சம் சாதி ஏற்றத்தாழ்வுகளை, சாதி கலவரங்களை, கவுரவ கொலைகளை ஒழிக்க போராட்டங்கள் நடந்து கொண்டிருக்கையில்,
இது போன்ற சாதியை தாங்கிப்பிடிக்கும் படங்கள் அவர்களிடம் உள்ள சிறு குற்ற உணர்வு, குழப்பம், மனிதநேயத்தை தகர்க்கின்றன.. மாற்றத்திற்கான போராட்டத்தை நீர்த்துப்போக செய்கின்றன.. அதையும் மீறி சில அதிமேதாவி கூட்டங்களும் இது போன்ற படங்களை ஆதரிக்க ஒரே காரணம்.. தன் சாதியை, அல்லது மொத்த சாதியமைப்புமுறையையும் தூக்கி பிடிக்கவே ஆகும்.